https://s3.amazonaws.com/adaderanatamil/1575879231-baby-2.jpg

கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட கைக்குழந்தை

இரண்டரை மாத ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று துன்னாலையில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (08) நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் குழந்தை உறங்கியுள்ளான்.

இந்த நிலையில் குழந்தையை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என்று தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று (09) காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று விசாரணையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார், தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-