https://s3.amazonaws.com/adaderanatamil/1575862338-Election-2.jpg

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டம் நாளை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று நாளை (10) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கமைய நாளை காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் ஆணைக்குழுவின் மேலும் சல உறுப்பினர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.