http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__148189723491669.jpg

'கூட்டணி அமைப்பது அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை'... சிவசேனா கூட்டணிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டணி அமைப்பது அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமை, அதில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளளார்.  மகாராஷ்டிராவில் கடந்த ஒருமாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. கடந்த வாரம் வரை மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியநிலையில், அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் கடத்த சனிக்கிழமையன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனால் கோபமடைந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நாடாளுமன்ற பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை பாட்னவிஸ் மற்றும் அஜித்பவார் ராஜினாமா செய்தனர். இதையடுத்து,

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள்  புதிய அரசை உருவாக்கியுள்ளன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா, காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்ததை எதிர்த்து இந்து மகா சார்பில் பிரமோத் பண்டிட் ஜோஇ என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனநாயக நாட்டில் தேர்தலுக்கு பிறகு யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள் என்பது அரசியல் கட்சிகளின் விருப்பம் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் இந்த உரிமையை நீதிமன்றம் தடுக்க முடியாது என்றும், இதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும் எனவும் கூறினார். அதுபோலவே தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையும் ஏற்க முடியாது. அது நீதிமன்றங்களி்ன் வேலையும் அல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.