https://s3.amazonaws.com/adaderanatamil/1575022245-Chandimal-2.jpg

பாகிஸ்தான் தொடரில் சந்திமால்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியுடன் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்துக் கொள்ளும் இலங்கை அணியின் இறுதி 16 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன பெயரிடப்பட்டுள்ள நிலையில், தினேஸ் சந்திமால் மற்றும் எஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் அணியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அதன்படி, ஓசத பெர்ணான்டோ, குசல் மெந்திஸ், குசல் ஜனித் பெரேரா, லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லசித் அம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித்த மற்றும் லக்‌ஷான் சந்தகென் ஆகியோர் ஏனைய வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இரண்டு போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடர்பில் கலந்து கொள்வதற்காக எதிர்வரும் 08 ஆம் திகதி இலங்கை அணி பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.