http://img.dinakaran.com/data1/DWeeklys/noimage.jpg

டீசலுக்கான மானியம் பெறுவதற்கு ஸ்மார்ட் கார்ட் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம்: மீனவர் சங்கம் அறிவிப்பு

சென்னை: டீசலுக்கான மானியம் பெறுவதற்கு ஸ்மார்ட் கார்ட் திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்க கூட்டமைப்பின் தலைவர் பிரபாகரன் அறிவித்துள்ளார். ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15 வரை மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. டீசல் ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தினால் கடலுக்கு சென்று திரும்பிய பின்னரே மானியம் வழங்கப்படும் என்பதால் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.