மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி

by

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள கோரகல்லிமடுவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

முருகன் கோயில் வீதி கோரகல்லிமடு கிரானைச் சேர்ந்த பி.பாலசுப்பிரமணியம் வயது (45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/murder_korakalli001/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/murder_korakalli002/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/murder_korakalli003/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png
https://dimg.zoftcdn.com/s1/photos/news/sites/full/11-3/murder_korakalli005/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.png