https://s3.amazonaws.com/adaderanatamil/1575011865-kamal-guaratna-2.jpg

ஊடகங்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் போன்று எதிர்காலத்திலும் ஊடகங்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

காலி, அஹுன்கல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

யுத்தக் காலப்பகுதியில் ஊடகங்கள் காரணமாக தேவையான படை வீரர்களை பெற்றுக் கொள்ள முடிந்ததாக தெரிவித்த அவர், ஊடகங்களினால் யுத்த கள நிலவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிந்து கொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கான செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.