http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__38356959819794.jpg

ராதாபுரம் தொகுதி வழக்கில் டிசம்பர் 11ம் தேதி இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கில் டிசம்பர் 11ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.