http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__709392726421357.jpg

கோவையில் ரயில் புறப்பட்ட நிலையில் ஏற முயன்ற போது தடுமாறிய பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு மழை

கோவை: கோவையில் ரயில் புறப்பட்ட நிலையில் ஏற முயன்ற போது தடுமாறிய பெண்ணை மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மங்களூர் செல்லும் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது ஒரு குடும்பத்தினர் ஓடி வந்து ரயில் ஏற முயன்றுள்ளனர். கணவர், குழந்தையுடன் ரயிலில் ஏறிவிட்ட நிலையில் அவரது மனைவி ஏற முயன்ற போது நிலை தடுமாறியுள்ளார். கீழே விழுந்த அந்த பெண்ணை பணியில் இருந்த ரயில்வே காவலர் பாலகிருஷ்ணன் வேகமாக சென்று  சாதுர்யமாக காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

பெரும் விபத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றி காவலர் பாலகிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் பாராட்டு பத்திரம் வழங்கி இருக்கிறது. அவசரம் என்ற நிலையில் விபத்து ஏற்படும் அளவுக்கு ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.