http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__890148341655732.jpg

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்: திமுக முறையீட்டை ஏற்றது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திமுக முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.