http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__55919826030732.jpg

ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி, ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுவதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் கட்டாயம் என்பது வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சக்கட்டம் என கூறியுள்ளார்.