https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/29/original/Haridwar_RAwjRNo_AKUlRg9.jpg

அடையாள அட்டை வழங்காததால் ஆவேசம்: ரயில் பெட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்

by

அடையாள அட்டை வழங்காத காரணத்தால் ஆவேசமடைந்த மர்ம நபர் ரயில் பெட்டிக்கு தீ வைத்தார்.

அடையாள அட்டை வழங்காத காரணத்தால் ஆவேசமடைந்த மர்ம நபர் உத்தரகண்ட்டின் ஹரித்துவார் ரயில் நிலையத்தில் ரிஷிகேஷ், தில்லிக்கு இடையிலான ரயில் பெட்டிக்கு தீ வைத்ததையடுத்து வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த மர்ம நபர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது,

எனக்கு அடையாள அட்டை வழங்கவில்லை. எனவே ரயில் பெட்டிக்கு தீ வைத்தும், அதிலிருந்த இருக்கைகளை கிழித்தும் நாசமாக்கினேன் என்றார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர் மீது இதர குற்றவியல் வழக்குகள் ஏதேனும் உள்ளதா எனும் கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே போலீஸ் இணை எஸ்.பி. மனோஜ் குமார் கத்யல் கூறுகையில், தனக்கு அடையாள அட்டை வழங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்து இதுபோன்ற செயல்களில் அந்த மர்ம நபர் ஈடுபட்டுள்ளார். அவர் மீது வேறு ஏதேனும் குற்றவியல் வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!