https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/11/29/original/car_collides_with_gas_tanker.jpg

எரிவாயு லாரி மீது கார் மோதி விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே சாவு

by

எரிவாயு லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

மும்பை, புணே தேசிய நெடுஞ்சாலையில் ரசயானி மாவட்டத்தின் அருகே சென்று கொண்டிருந்த எரிவாயு லாரி பின்புறத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4:45 மணியளவில் மகாராஷ்டிரத்தின் சங்க்லி மாவட்டத்தில் இருந்து வந்துகொண்டிருந்த கார் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த ஒரு பெண் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!