https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/12/original/tngov1.jpg

இன்றைய வேலைவாய்ப்பு செய்தி என்ன தெரியுமா? 

by

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. 

நிறுவனம்:    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை 

பணியிடம்: நாகப்பட்டினம்

மொத்த காலியிடங்கள்: 14

பணி: அலுவலக உதவியாளர் - 08
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி:  எழுத்தர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: ஈப்பு ஓட்டுநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: இரவுக்காவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு:  குறைந்தபட்ச வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2019/11/2019111987.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.12.2019

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!