https://s3.amazonaws.com/adaderanatamil/1575004949-Bandula-2.jpg

'சுரேக்ஸா' காப்புறுதி திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ´சுரேக்ஸா´ காப்புறுதி திட்டத்தை எதிர்காலத்தில் இதனைவிட மிக சிறப்பாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (28) விசேட அறிவிப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விலைமனு கோரல் இன்றி மாணவர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டமை குறித்த ஒப்பந்தம் தொடர்பில் உரிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.