https://s3.amazonaws.com/adaderanatamil/1575004198-rohana-laxman-2.jpg

சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாணை நடத்தப்படும் என அந்த கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸமன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கட்சிக்குரிய ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக வெளிப்படையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.