கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுவது உறுதி! கருணா

by

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது உறுதி என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - களுதாவளை, ஈஸ்வரன் ஆலய முன்றலில் நேற்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதம மந்திரியுமான மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் மாலை 5.30 மணியளவில் அனைத்து கட்சிகள் குழுவாக சந்தித்திருந்தோம்.

அதிலே பல விடயங்கள் உரையாடப்பட்டது. அதிலே கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன். அதனை தரமுயர்த்தி தருவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

அளித்த வாக்குறுதிகளை மீறி செயற்படாத அவர் ஆணித்தனமாக அனைத்து கட்சிகள் மத்தியில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவல்களை கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.