லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிய காவல் ஆய்வாளர் – மின்முரசு

ராமநாதபுரம் அருகே லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இடையத்தூர் மேலகுடியிருப்பைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி ஹேமலதா. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த 20 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில் இருந்து ஒரு பெண்ணை விடுவிக்க பார்த்திபனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜராஜன் 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், 5 ஆயிரம் ரூபாய் கேட்டு அவர் வற்புறுத்தவே, பாதிக்கப்பட்டவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜராஜனிடம் வழங்கியுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக‌ காவல்துறையினர் ராஜராஜனை கையும் களவுமாகப் பிடித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

Sneha Suresh

Post navigation

ரூ.5,583 கோடி நிகரலாபம்.. இது தான் காலாண்டு லாபத்திலேயே அதிகம்.. எஸ்பிஐ அதிரடி..! இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2019-2020: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Related Posts

தஞ்சை கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி – மதுரை உயர்நீதிநீதி மன்றம் தீர்ப்பு

murugan Feb 1, 2020 0 comment

மடியை நனைக்கும் நதியே…6 நிமிட வாசிப்பு“பச்ச உடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லு… பிள்ளைக்குத் தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு” என்று கிழக்குச…

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment

ஊடக அறம், உண்மையின் நிறம்!2 நிமிட வாசிப்புகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்து…

murugan Feb 1, 2020Feb 1, 2020 0 comment