யாரும் வெளியில் இருக்க விம்ப மாட்டார்கள்: ஒருநாள் போட்டி குறித்து உமேஷ் யாதவ் சொல்கிறார் – மின்முரசு

டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம் பிடித்து விளையாடி வரும் நிலையில், ஒருநாள் போட்டிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தி வருகிறேன் என உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உமேஷ் யாதவ். 32 வயதாகும் இவர் இந்திய அணிக்காக 45 டெஸ்ட், 75 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மட்டுமே தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிதான் அவருடைய கடைசி போட்டியாகும்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘நாட்டிற்காக விளையாடும் வாய்ப்பை எனக்கு அளித்த தேர்வுக் குழுவினருக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்கள் சிறந்த நீதியாளர்கள். மீண்டும் ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் வகையில் எனது திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டு வருகிறேன். இதற்காக நான் என்ன செய்ய வேண்டுமென்றாலும் செய்வேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Ilayaraja

Post navigation

எவரெஸ்ட் பிரிமீயர் லீக்கில் விளையாடுகிறார் கிறிஸ் கெய்ல் ராமாயணத்தில் லாஜிக்கே இல்லை; மிஷ்கின் பரபரப்பு

Related Posts

தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி

Sneha Suresh Jan 31, 2020Jan 31, 2020 0 comment

மத்திய வரவு செலவுத் திட்டம் 2020 LIVE: நாளை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

murugan Jan 31, 2020Jan 31, 2020 0 comment

வரவு செலவுத் திட்டம் 2020: உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் அதிகரிக்குமா.. எதிர்பார்ப்புகள் என்ன?

murugan Jan 31, 2020 0 comment